கமலா ஜெயபாலன்

சுடர்
இன்பம் பெருகி இன்னல் நீங்கிடும்
இதயச் சுடரும் இதமாய் மாறிடும்
அன்பின் நாதம் அழகாய் பிறந்துடும்
அதற்காய் என்பும் இசைந்தே உருகிடும்

கண்ணில் கண்ட காட்சிகள் யாவும்
கருணை வடிவாம் கடவிளின் கொடையாம்
எண்ணில் அடங்கா ஈகைச் சுடர்கள்
எரிந்தன மண்ணில் ஏங்கின மனமும்

விண்ணிற்கு அழகு விண்மீன் கூட்டம்
விடுதலை என்பது வீரனின் கனவு
பண்ணில் பருகிடும் பழரசம் இனிமை
பலரும் ஏற்றிடும் பாசமும் சுடரே

ஒளியின் சுடரில் உலகம் உருழுது
உழவன் வாழ்வும் உயருது இதுவால்
வளியும் வீசியே வாழ்திடும் உயிர்கள்
வந்திடும் வசந்தம் வாழ்வினில் மலர்ந்தே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading