கமலா ஜெயபாலன்

மணி
மணியின் நாதம் மனதிற் கினிமை
பணியைச் செய்ய பகன்றிடு மோசை
பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே
துள்ளி யோட துடுப்பா யியங்கும்

மணிக்குப் பணிதல் மானிட மாண்பு
மதங்கள் அனைத்தும் மணியின் தொடர்பே
கண்ணின் மணியும் கடமையைச் செய்யும்
கருத்துடன் வாழ்வில் காரிய மாற்றும்

மணியாய் வாழ மலரு முலகம்
மனமும் மகிழும் மனிதம் சிறக்கும்
சத்தமும் நாதமும் சங்கம மாக
பந்தமும் பாசமும் பரவச மடையும்/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading