கமலா ஜெயபாலன்

திருநங்கை
புரியாமை என்ற போக்கால் போர்க் களம்
மரிக்கும் வரையும் மனதை அரிக்கும்
தவிக்கும் உள்ளம் தாங்கோணாத் துன்பம்
தவிர்க்கும் குடும்பம் தன்பிள்ளை மறந்து/

கண்ட கனவுகள் காணாமற் போகும்
எண்ணங்கள் எல்லாம் இலக்கற்றும் ஓடும்
சொந்தம் பிரிந்து சேரும் தன்னினம்
வந்திடும் பெயரும் வகையாய் திருநங்கையென

கண்ணே கண்ணைக் குற்றிக் குடையும்
மண்ணில் மலர்ந்த மலர்கள் கருகும்
பண்பும் மாறி பரிகாசம் ஆகும்
புண்பட்ட வாழ்வும் போராய் முடியும்

வாழ்வு வேண்டும் வரமாய் வேண்டும்
தாழ்வு போக்கிய தகுதியும் வேண்டும்
மாழ்வு வராத மகத்துவம் வேண்டும்
காழ்வு அகற்றிய கண்ணியம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading