29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கமலா ஜெயபாலன்
கருணையொடு கைகொடு
உள்ளத்தில் உகவைபொங்க
உலகத்தை நீயறிவாய்
பள்ளத்தில் வீழ்ந்தலும்
பண்பிலே நீகுறையாய்
கள்ளமில்லா நல்வாழ்வு
கண்டதினால் உயர்வாவாய்
துள்ளுகின்ற மனத்தாலே
துயர்தனைத் துடைத்திடுவாய்
அன்னையின் அன்பினிலே
ஆழத்தை நீயறிவாய்
அன்பின் ஊற்றினிலே
அகிலத்தை அணைத்திடுவாய்
இன்பத்தால் இதயத்தில்
இறைவனையும் ஏற்றிடுவாய்
மன்னுயிரை என்நாளும்
மாண்புடன் அணைத்திடுவாய்
வதிவிடத்தில் வாழ்நாளை
வாஞ்சையுடனே பதியவேணும்
கதியற்ற மாந்தருக்கு
கைகொடுத்தே உதவவேணும்
மதியுடனே காரியங்கள்
மனதாரச் செய்யவேணும்
நதிபோல ஓடவேணும்
நல்லவராய் வாழவேணும்
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...