மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

கமலா ஜெயபாலன்

களையெடுக்கும் கன்னிப்பெண்ணே
—————————-
களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/
கண்ணே உன்னக் கண்ட தனால்/
வயல்காட்டு வரம்பினிலே
வந்துநானும் சுத்துறேன்டி/
பயலைப் பிடிச்சிருக்கா
பயப்படாமல் சொல்லேண்டி/

கண்ணழகு மூக்கழகு கண்மணியே உன்னழகு/
கண்மூட முடியாமல்
கலக்கி அடிக்குதடி/
பொன்னான உன்பாதம்
மண்ணான சேற்றிலே/
மடங்கிப் போகாமல்
மாமன் தாங்குவேண்டி/

கன்னக் குழியழகும் கருங்கூந்தல் பேரழகும்/
அன்ன நடையழகும் அசத்துதடி என்மனசை/
பண்ணாலே பாட்டிசைத்து பம்பரமாய் நாற்றுநட/
காதல் பெருகுதடி காளைமனம் ஏங்குதடி/

வண்ணக் கிளியழகே
வடிவான பெண்ணழகே/
வளையலும் சினுங்குதே
வருவாயோ எனதருகே/
தருவாயா உன்மனசை
தாங்குவேண்டி காலமெல்லாம்/
முருகன் முறைப்படியே
அருகில்வந்து அமரேண்டி/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan