நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தொழிலாளி
தன்னை உருக்கித் தரணி காப்பான்
குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான்
மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான்
எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும்
தாயின் அன்புபோல் தருபவர் யாருளரோ
நோயில் நொடிந்து நொந்தாலும் வாழ்வில்
வாயில்லா சிவனாய் வாழ்ந்து மடிந்தான்

கால மாற்றம் கடுகதி வாழ்க்கை
கோலம் மாறிக் கொண்டது இன்று
விஞ்ஞான வாழ்வு வெற்றியும் கொண்டது
மெஞ்ஞானம் எல்லாம் மாற்றம் கண்டது

அரிவி வெட்ட அசுர இயந்திரம்
கருவிகள் பலவும் கண்டு உலகில்
மருவி இன்று மறைந்து போகுது
கண்ணி என்ற கற்கை மனிதனால்.

தொழில் நுட்பம் தோன்றினாலும் தோற்காது
தொழிலாளி நற்பணி தொடரும் காலமெல்லாம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading