கமலா ஜெயபாலன்

தொழிலாளி
தன்னை உருக்கித் தரணி காப்பான்
குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான்
மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான்
எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும்
தாயின் அன்புபோல் தருபவர் யாருளரோ
நோயில் நொடிந்து நொந்தாலும் வாழ்வில்
வாயில்லா சிவனாய் வாழ்ந்து மடிந்தான்

கால மாற்றம் கடுகதி வாழ்க்கை
கோலம் மாறிக் கொண்டது இன்று
விஞ்ஞான வாழ்வு வெற்றியும் கொண்டது
மெஞ்ஞானம் எல்லாம் மாற்றம் கண்டது

அரிவி வெட்ட அசுர இயந்திரம்
கருவிகள் பலவும் கண்டு உலகில்
மருவி இன்று மறைந்து போகுது
கண்ணி என்ற கற்கை மனிதனால்.

தொழில் நுட்பம் தோன்றினாலும் தோற்காது
தொழிலாளி நற்பணி தொடரும் காலமெல்லாம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading