நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தொழிலாளி
தன்னை உருக்கித் தரணி காப்பான்
குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான்
மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான்
எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும்
தாயின் அன்புபோல் தருபவர் யாருளரோ
நோயில் நொடிந்து நொந்தாலும் வாழ்வில்
வாயில்லா சிவனாய் வாழ்ந்து மடிந்தான்

கால மாற்றம் கடுகதி வாழ்க்கை
கோலம் மாறிக் கொண்டது இன்று
விஞ்ஞான வாழ்வு வெற்றியும் கொண்டது
மெஞ்ஞானம் எல்லாம் மாற்றம் கண்டது

அரிவி வெட்ட அசுர இயந்திரம்
கருவிகள் பலவும் கண்டு உலகில்
மருவி இன்று மறைந்து போகுது
கண்ணி என்ற கற்கை மனிதனால்.

தொழில் நுட்பம் தோன்றினாலும் தோற்காது
தொழிலாளி நற்பணி தொடரும் காலமெல்லாம்

Nada Mohan
Author: Nada Mohan