மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

தொழிலாளி
தன்னை உருக்கித் தரணி காப்பான்
குன்றில் ஏற்றிக் குலமும் வளர்ப்பான்
மண்ணைப் பொன்னாக்கி மகுடம் சூடுவான்
எண்ணில் அடங்கா இன்னல்கள் காண்பான்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும்
தாயின் அன்புபோல் தருபவர் யாருளரோ
நோயில் நொடிந்து நொந்தாலும் வாழ்வில்
வாயில்லா சிவனாய் வாழ்ந்து மடிந்தான்

கால மாற்றம் கடுகதி வாழ்க்கை
கோலம் மாறிக் கொண்டது இன்று
விஞ்ஞான வாழ்வு வெற்றியும் கொண்டது
மெஞ்ஞானம் எல்லாம் மாற்றம் கண்டது

அரிவி வெட்ட அசுர இயந்திரம்
கருவிகள் பலவும் கண்டு உலகில்
மருவி இன்று மறைந்து போகுது
கண்ணி என்ற கற்கை மனிதனால்.

தொழில் நுட்பம் தோன்றினாலும் தோற்காது
தொழிலாளி நற்பணி தொடரும் காலமெல்லாம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading