மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

வசந்தமே வா வா
——/////——-/////
வண்டும் வலம்வர வண்ணமலர் மணம்வீச
கண்டும் களிக்கும் கனகாம்பரப் பூமலர
சிட்டுக் குருவி சில்லென்று பறந்துவர
வட்டமிட்டு தேனீயும் வாயூதி ரீங்காரமிடும்

முள்ளி வாய்க்கால் கள்ளியும் பூப்பூத்து
அள்ளி மடிந்த அனைவருக்கும் ஆசிகூறும்
எரிந்த நிலமும் எளிலாய் உயிர்பெற
பரிந்து நாமும் பகிர்வோம் அஞ்சலி

மரங்கள் துளிர்விட மான்குட்டி துள்ளியோட
தரமான காய்கறியும் தாழ்வாரத்தில் தான்வளர
ஆடைகள் சுருக்கி ஆங்காங்கே ஆணும்பெண்ணும்
வாடைக் காற்று வாங்க வருங்காட்சியும்

வசந்தம் வந்தால் வரும்எமக்கு விடிவு
விசமான காலம் விடிவும் விரைவில்
மலர்கள் இதழ்விரித்து மலர மணமும்
பலர்வாழ்வில் வீசும் பாரினில் பாரீர்

வருக வசந்தமே வனப்பான வாழ்வைத்
தருக எமக்கு தாரணி சிறக்க
எட்டுத் திக்கும் ஏங்கி வாழும்எம்மினம்
பட்டதுபோதும் பறவைக் கூட்டமாய் ஒன்றாவோம்

வண்ண மலர்கள் வடிவைத் தர
கண்ணைப் பறிக்கும் கதிரவன் ஒளியும்
கப்பல் ஓடும் கடற்கரைக் காட்சியும்
எப்போதும் எமக்கு ஏற்றது வசந்தமே
வசந்தமே வா வா
சாந்தமே தா தா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading