ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி
மகிழ்ந்திருக்கும் திங்களிது/
கார்மேகம் சூழ்ந்திருந்து
கறுத்திருக்கும் திங்களிது/
பார்காக்கும் பரமசிவனும்
பிட்டுக்கு மண்சுமந்து/
பார்பதியை பாதியாக்கிய
பரமனைத் தானெழுப்பி/
ஊர்எங்கும் திருவெண்பா
பாடுகிற மாதமிது//

அதிகாலை நீராடி
ஆயர்குலப் பெண்கள்/
கதியே நந்தகோபனென
காத்திருக்கும் மாதமிது/
மதிநிறைந்த நன்நாளில்
மையிட்டு எழுதாமல்/
விதியே கண்ணனென
வீற்றிருக்கும் திங்களிது/
குதித்தெழுந்து பெண்கள்
கொண்டாடும் காலமிது//

நெற்கதிர்கள் தலைசாய்ந்து
நிற்கன்ற மாதமிது/
பற்கள் படபடத்து
சொற்கள் தடுமாறும்/
பெய்கின்ற மழையில்
தண்ணிர் சலசலக்கும்/
தவளை சத்தமிடும்
பாம்பும் உலாவரும்/
பத்திரமாய் வீட்டினுள்ளே
படுத்திருக்க ஆசைவரும்/

கமலா ஜெயபாலன்

விருப்புத் தலைப்பு

Nada Mohan
Author: Nada Mohan