சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி
மகிழ்ந்திருக்கும் திங்களிது/
கார்மேகம் சூழ்ந்திருந்து
கறுத்திருக்கும் திங்களிது/
பார்காக்கும் பரமசிவனும்
பிட்டுக்கு மண்சுமந்து/
பார்பதியை பாதியாக்கிய
பரமனைத் தானெழுப்பி/
ஊர்எங்கும் திருவெண்பா
பாடுகிற மாதமிது//

அதிகாலை நீராடி
ஆயர்குலப் பெண்கள்/
கதியே நந்தகோபனென
காத்திருக்கும் மாதமிது/
மதிநிறைந்த நன்நாளில்
மையிட்டு எழுதாமல்/
விதியே கண்ணனென
வீற்றிருக்கும் திங்களிது/
குதித்தெழுந்து பெண்கள்
கொண்டாடும் காலமிது//

நெற்கதிர்கள் தலைசாய்ந்து
நிற்கன்ற மாதமிது/
பற்கள் படபடத்து
சொற்கள் தடுமாறும்/
பெய்கின்ற மழையில்
தண்ணிர் சலசலக்கும்/
தவளை சத்தமிடும்
பாம்பும் உலாவரும்/
பத்திரமாய் வீட்டினுள்ளே
படுத்திருக்க ஆசைவரும்/

கமலா ஜெயபாலன்

விருப்புத் தலைப்பு

Nada Mohan
Author: Nada Mohan