” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி
மகிழ்ந்திருக்கும் திங்களிது/
கார்மேகம் சூழ்ந்திருந்து
கறுத்திருக்கும் திங்களிது/
பார்காக்கும் பரமசிவனும்
பிட்டுக்கு மண்சுமந்து/
பார்பதியை பாதியாக்கிய
பரமனைத் தானெழுப்பி/
ஊர்எங்கும் திருவெண்பா
பாடுகிற மாதமிது//

அதிகாலை நீராடி
ஆயர்குலப் பெண்கள்/
கதியே நந்தகோபனென
காத்திருக்கும் மாதமிது/
மதிநிறைந்த நன்நாளில்
மையிட்டு எழுதாமல்/
விதியே கண்ணனென
வீற்றிருக்கும் திங்களிது/
குதித்தெழுந்து பெண்கள்
கொண்டாடும் காலமிது//

நெற்கதிர்கள் தலைசாய்ந்து
நிற்கன்ற மாதமிது/
பற்கள் படபடத்து
சொற்கள் தடுமாறும்/
பெய்கின்ற மழையில்
தண்ணிர் சலசலக்கும்/
தவளை சத்தமிடும்
பாம்பும் உலாவரும்/
பத்திரமாய் வீட்டினுள்ளே
படுத்திருக்க ஆசைவரும்/

கமலா ஜெயபாலன்

விருப்புத் தலைப்பு

Nada Mohan
Author: Nada Mohan