இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

பங்குனி
மாசிப் பனியும் மூசிப் பெய்து
தூசிகள் போக்கி தொடங்கும் பங்குனி
பங்குனி என்றால் பரவசம் தானே
மங்கள நாட்கள் மகிழ்வுடன் வருமே

மண்ணில் முகுழும் மொட்டுக்கள் மலரும்
கண்ணில் தெரியும் கருவண்டுச் சுற்று
பண்ணாய் பாடிப் பரவச மூட்டும்
விச்ணில் பறவைகள் வேகமாய் வட்டமிடும்

திருமணம் என்ற தெவிட்டாத செல்வம்
ஒருவரை ஒருவர் உயிருடன் பிணைத்து
மணமும் முடித்து மாங்கல்யம் பெற்று
கணமெனும் பிரியாக் காதலர் ஆவர்

புதுமனை புகுதல் பூப்பு நீராட்டு
எதுவென் றாலும் இம்மாதம் நடக்கும்
பொங்கும் மனமும் பங்குனித் திங்களால்
பங்குனி என்றால் பரவசம் தானே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading