முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பங்குனி
மாசிப் பனியும் மூசிப் பெய்து
தூசிகள் போக்கி தொடங்கும் பங்குனி
பங்குனி என்றால் பரவசம் தானே
மங்கள நாட்கள் மகிழ்வுடன் வருமே

மண்ணில் முகுழும் மொட்டுக்கள் மலரும்
கண்ணில் தெரியும் கருவண்டுச் சுற்று
பண்ணாய் பாடிப் பரவச மூட்டும்
விச்ணில் பறவைகள் வேகமாய் வட்டமிடும்

திருமணம் என்ற தெவிட்டாத செல்வம்
ஒருவரை ஒருவர் உயிருடன் பிணைத்து
மணமும் முடித்து மாங்கல்யம் பெற்று
கணமெனும் பிரியாக் காதலர் ஆவர்

புதுமனை புகுதல் பூப்பு நீராட்டு
எதுவென் றாலும் இம்மாதம் நடக்கும்
பொங்கும் மனமும் பங்குனித் திங்களால்
பங்குனி என்றால் பரவசம் தானே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading