கமலா ஜெயபாலன்

நிர்மூலம்
தாய்தந்த நாடும் தண்ணீரும் விட்டு
திசைதெரியா நாட்டில் திக்கற்று வாழ்ந்து
வாய்விட்டுப் பேச வார்த்தை யின்றி
வருந்தி உலைந்து வாழ்வும் தொலைத்து
பாய்யில் படுத்த பண்பான காலம்
பெற்றோர் பெரியோர் பேசிய வார்த்தைகள்
நோய் கண்டபோது நெற்றி தொட்டு
நின்மதி தந்த நேசக் கரங்கள்
காய்ந்த பூமியில் கான முடியுமா
கயவர்கள் நிர்மூலம் காயம் மாறுமா

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading