கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – விருது

நல்லாசிரியர் விருதினை
நான்பெற்ற தருணம் நல்லதோர் மனத்தினர் நான்குபேர் வாழ்த்தினர்

மதியின் புகழ்ச்சி மனத்தினில் மகிழ்ச்சி விதியினை இகழ்ச்சி வினையால் நெகிழ்ச்சி

ஆசான் குலத்திற்கு அழகு சேர்த்தவளாய் பேசாமடமை உறவுகளும்
பேரின்பமும்
பெரும்வாழ்த்தும்

ஈழத்துத் தமிழச்சியே இந்தியத் திருநாட்டை நேசி
வாழ்த்தியே அன்னைதந்தை வாழ்கவென ஆசி

பட்டம் பெற்றுபலர்
பணியின்றி பாதைமாற சட்டதிட்டம் தாண்டி சாதித்ததில் பெருமிதம்

வரலாற்றில்
நான்பெற்ற
வரமென எண்ணுகிறேன் கரத்தினில் எழுதுகோல் காலமெல்லாம் சாதிப்பேன்

வாழ்த்திய உள்ளங்களை
வணங்கி நிற்கின்றேன் வாழ்க்கை பயணத்தின் வழித்துணை உறவுகளே

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading