கவலைகள்

கவிதை 801

மெல்ல மெல்ல மனதின் சுவர்களை
உப்புறமாக சுரண்டும் மௌன சிராய்ப்புகள்
கேட்கப்படாத கேள்விகள் சொல்லப்படாத பதில்கள்
என்ன ஆகுமோ என்ற வாக்கியம்
அடுக்கடுக்காக கவலைகளாக உள்ளத்தில் குடியேறும்

நினைவுகளின் சாலையில் திரும்பத் திரும்ப
முன்னும் பின்னும் நடக்க வைக்கும்
தூக்கம் கண் கதவை தட்டும்
எண்ணங்கள் உள்ளே பூட்டிக்கொண்டு விழித்திருக்கும்

ஒரு மனம் புன்னகைத்து மகிழ்கின்றது
மற்றொன்று கவலைகளுள் சிக்கித் தவிக்கின்றது
மனம் மெதுவாக கற்றுக்கொள்ள பழக்கட்டுமின்று
கவலைகள் வாழ்க்கையின் முகவரி அல்லவென்று

ஜெயம்
18-12-2025

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading