” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிரான உறவே…….

ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026

அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே
உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே
நிழலாய்வந்து நிலைகொண்டு
நிஜமாய்வாழும் என்பாதி நீயே !

எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய
ஏதுமறியாச் சொந்தமிது ஏழேழுஜென்மப் பந்தமிது
உன்னோடுவாழும் ஒவ்வொரு நொடியும்
ஆத்மபலத்தை வாழ்வின் பந்தத்தை
ஆயுள்கடந்தும் எடுத்துச் செல்லுமே
வாழ்வியல் பயணத்தில் வலிகள்வந்தாலும்
உன்கைபிடித்து நடக்கையில் வசந்தமாகிறது வாழ்வு !

முத்துவிழாப் பந்தமிது முத்திரைபதித்த விந்தையிது
முத்துக்கள் மூன்றோடும் முத்தாய்ப்பான வாழ்விது
சட்டென்று கோபம்வந்தாலும்
பட்டென்று மறந்துவிடும் பாசக்காரன்நீ
என்னுயிரே மண்வாசம் மழைக்குச்சொந்தம்
உன்சுவாசம் எனக்கே சொந்தம் !