உயிரான உறவு 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026

உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என்
மூச்சுள்ள வரை உனை சுமப்பேன்

பல பிள்ளை ஈன்றபோதும்
பாரபட்சமன்றி பாசம் தந்து
திகைக்க வைக்கும் அன்பு மழையே
தித்திக்க வைக்கும் தெய்வீகச் சுடரே!

பிள்ளையின் கனவை தன்
பெரும் வாழ்வாய்க் கொண்டு
வெற்றிக்காய் பாடுபடுபவரே
வெண்மை உள்ளம் கொண்டவளே

சொல்லில் வடிக்க முடிக்கா காவியமே
சொற்களும் உன்னிடம் தோற்குமே
உயிரான உறவு நீயே அம்மா..
உன்னைப் புகழ வார்த்தை இல்லை எனக்கு….

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading