கவிஞர் விண்ணவன்

எனது உயிர் நண்பன்.
***~~***~~***~~***~~***
என் துன்பங்களின்
போதும்,
என் இன்பங்களின்
போதும்,

நீ எனக்கு
துணையாகவும்,
ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய்.

பாடசாலையில்
எனக்கு ஒரு
பிரச்சனை என்றால்;
முதலாவதாக
வருவதும் நீயே!

யாராவது
என்னைப்பற்றி;
தவறாக உன்னிடம்
கூறினால்,

நீ கூறுவது
ஒன்றுதான்,

அவன் எனது
உயிர் நண்பன்;
அவனைப்பற்றி
எனக்குத் தெரியும்.

தேவை இல்லாமல்
அவனைப்பற்றி
தவறாக பேசவேண்டாம்;
என்று கூறுவாய்.

நீ எனது
நண்பனாக கிடைத்ததில்
எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.

உனது நட்பிற்கு
நான் என்றும்
அடிமை.
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading