அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கவிஞர் விண்ணவன்

எனது உயிர் நண்பன்.
***~~***~~***~~***~~***
என் துன்பங்களின்
போதும்,
என் இன்பங்களின்
போதும்,

நீ எனக்கு
துணையாகவும்,
ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய்.

பாடசாலையில்
எனக்கு ஒரு
பிரச்சனை என்றால்;
முதலாவதாக
வருவதும் நீயே!

யாராவது
என்னைப்பற்றி;
தவறாக உன்னிடம்
கூறினால்,

நீ கூறுவது
ஒன்றுதான்,

அவன் எனது
உயிர் நண்பன்;
அவனைப்பற்றி
எனக்குத் தெரியும்.

தேவை இல்லாமல்
அவனைப்பற்றி
தவறாக பேசவேண்டாம்;
என்று கூறுவாய்.

நீ எனது
நண்பனாக கிடைத்ததில்
எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.

உனது நட்பிற்கு
நான் என்றும்
அடிமை.
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading