மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கவிதையெனும் காவியம்

“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024

கவிதையெனும் காவியம்
அழகியலின் அற்புத ஒவியம்
அதிசயம் தான் ஆனாலும் உண்மை
கவிதை நேரமதில் கவிதைக்கு ஓர்தினம்
கணித்துத் தந்ததே ஐ.நா மன்றும்
கவிதைத் தினமாக மார்ச் இருபத்தியோராம் நாளை !

தமிழுக்குச் சங்கம் அமைத்து
கவி பாடிய மொழி தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு
உயிர்மொழியே கவிதை
தமிழ் இலக்கியப் படைப்பில்
முதல் உருவாக்கம் கவியே
கவிதையெனும் காவியம் கண்கவரும் ஓவியம் !

காலத்தின் கண்ணாடியாய்
உண்மையின் உயிர்நாடியாய்
காலநதியின் ஓட்டமாய்
காவியத்தின் எழிலாய் அமைவது கவிதை
எண்ணத்தின் வண்ணமாய்
வார்த்தை ஜாலங்களைக் கோலமாக்கி
வண்ணமாய் கூறுவது கவிதை
வனப்பு மிக்க காவியம்
வண்ணத்து ஓவியம் கவிதை !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading