மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கவிதையெனும் காவியம்

“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024

கவிதையெனும் காவியம்
அழகியலின் அற்புத ஒவியம்
அதிசயம் தான் ஆனாலும் உண்மை
கவிதை நேரமதில் கவிதைக்கு ஓர்தினம்
கணித்துத் தந்ததே ஐ.நா மன்றும்
கவிதைத் தினமாக மார்ச் இருபத்தியோராம் நாளை !

தமிழுக்குச் சங்கம் அமைத்து
கவி பாடிய மொழி தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு
உயிர்மொழியே கவிதை
தமிழ் இலக்கியப் படைப்பில்
முதல் உருவாக்கம் கவியே
கவிதையெனும் காவியம் கண்கவரும் ஓவியம் !

காலத்தின் கண்ணாடியாய்
உண்மையின் உயிர்நாடியாய்
காலநதியின் ஓட்டமாய்
காவியத்தின் எழிலாய் அமைவது கவிதை
எண்ணத்தின் வண்ணமாய்
வார்த்தை ஜாலங்களைக் கோலமாக்கி
வண்ணமாய் கூறுவது கவிதை
வனப்பு மிக்க காவியம்
வண்ணத்து ஓவியம் கவிதை !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading