இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

கவிதையெனும் காவியம்

“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024

கவிதையெனும் காவியம்
அழகியலின் அற்புத ஒவியம்
அதிசயம் தான் ஆனாலும் உண்மை
கவிதை நேரமதில் கவிதைக்கு ஓர்தினம்
கணித்துத் தந்ததே ஐ.நா மன்றும்
கவிதைத் தினமாக மார்ச் இருபத்தியோராம் நாளை !

தமிழுக்குச் சங்கம் அமைத்து
கவி பாடிய மொழி தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு
உயிர்மொழியே கவிதை
தமிழ் இலக்கியப் படைப்பில்
முதல் உருவாக்கம் கவியே
கவிதையெனும் காவியம் கண்கவரும் ஓவியம் !

காலத்தின் கண்ணாடியாய்
உண்மையின் உயிர்நாடியாய்
காலநதியின் ஓட்டமாய்
காவியத்தின் எழிலாய் அமைவது கவிதை
எண்ணத்தின் வண்ணமாய்
வார்த்தை ஜாலங்களைக் கோலமாக்கி
வண்ணமாய் கூறுவது கவிதை
வனப்பு மிக்க காவியம்
வண்ணத்து ஓவியம் கவிதை !

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading