கவி இல(133) 16/05/24 வைகாசி என்றாலே

நேவிஸ் பிலிப்

வைகாசி பதினெட்டு எம் நினைவில்
என்றும் அழியாத கல் வெட்டு
முள்ளி வாய்க்கால் பேரவலம் எம்
நெஞ்சை விட்டகலா அலங்கோலம்

யுத்தத்தின் அனர்த்தங்கள்
விட்டுச் சென்ற பதிவுகள்
ஆண்டுகள் பதினைந்து ஓடி மறைந்தாலும்
அழிந்திடுமோ உம் நினைவு
அகன்றிடுமோ எம் மனதை விட்டு

வேரறுந்த மரங்களிலே
விளைந்த கனிகள் தங்கிடுமோ
அகவை பேதமின்றி
அரும்பும் மலருமாய்
கொத்துக் கொத்தாய்
சொரிந்து விட்ட பரிதாபம்

கண்ணீரும் செந்நீரும் கலந்தோடிய
மண்ணில் உறவுகள் பிரிய
முகவரிகள் தொலைய
அகதிகளாய் அநாதைகளாய்
தவித்து நின்ற மக்களின்
அவல நிலை கண்டோம்

முள்ளி வாய்க்கால் மண்பரப்பில்
பள்ளி கொள்ளும் எம் இனமே
வைகாசி வந்தாலே உம் நினைவால்
எம் கண்கள் பனித்திடவே
அஞ்சலிக்கின்றோம் .

நன்றி வணக்கம்..

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading