” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

காயங்கள் ஆறட்டும்..

வியாழன் கவி-2221..!!
காயங்கள் ஆறட்டும்..
இதயம் எனும் தாளில்
எத்தனை கீறல்கள்
இரக்கம் அற்றே தோன்றும்
வலியின் கோரங்கள்
இறப்பு எனும் விதி வரையில்
இதற்கு இல்லை தடை தானும்..

மனிதம் என்னும் தரு
வான்முட்ட எழும்
புனிதம் எனும் பேறு பெற
கண்ணீரில் கவி வரையும்
பொறாமை வஞ்சகம் இவை
பொறுமை அற்றே சேர்ந்துவிட
வறுமை வரும் மகிழ்வினிலே..!।

அன்பு எனும் மருந்து இட
அனைவராலும் முடியாதே
துன்பம் எனும் சுழல் விலக
சுமை குறையும் ஒரு நாளில்..!!
சிவதர்சனி இராகவன்
9.10.2025

Author: