காயங்கள் ஆறட்டும்..

வியாழன் கவி-2221..!!
காயங்கள் ஆறட்டும்..
இதயம் எனும் தாளில்
எத்தனை கீறல்கள்
இரக்கம் அற்றே தோன்றும்
வலியின் கோரங்கள்
இறப்பு எனும் விதி வரையில்
இதற்கு இல்லை தடை தானும்..

மனிதம் என்னும் தரு
வான்முட்ட எழும்
புனிதம் எனும் பேறு பெற
கண்ணீரில் கவி வரையும்
பொறாமை வஞ்சகம் இவை
பொறுமை அற்றே சேர்ந்துவிட
வறுமை வரும் மகிழ்வினிலே..!।

அன்பு எனும் மருந்து இட
அனைவராலும் முடியாதே
துன்பம் எனும் சுழல் விலக
சுமை குறையும் ஒரு நாளில்..!!
சிவதர்சனி இராகவன்
9.10.2025

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading