தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்

உழைப்பாளி

நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/
நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/
சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/
உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/

தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/
நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/
ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/
செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/

சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/
வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/
வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/
விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி //

கீத்தா பரமானந்தன்
10-05-22

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading