தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பசுமை!
வறுமை போக்கும்
வரமாய் உலகில்
வனப்பைச் சொரிந்தே
வசந்தம் பொழியும்!
நினைக்கும் பொழுதே
நேசம் பெருக்கி
நிமிர்வாய் உலகைக்
நிறுத்தும் பசுமை!

வானப் பொழிவாய்
வசந்த ருதுவாய்
கானல் விரட்டும்
கன்னல் வடிவம்!
கோனும் குடியும்
கோபுரம் ஆக
தானக் கொடையாய்
தரணியில் பசுமை!

உணவை உயிர்ப்பை
உவக்கும் மூலம்
உழைப்பை உயர்த்தும்
கனவுத் தாகம்!
பிணக்கம் அற்ற
பிறப்பின் தேடல்
வணங்கிக் காப்போம்
வளமாம் பசுமை!

கீத்தா பரமானந்தன்26-06-23

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading