கீத்தா பரமானந்தன்

பசுமை!
வறுமை போக்கும்
வரமாய் உலகில்
வனப்பைச் சொரிந்தே
வசந்தம் பொழியும்!
நினைக்கும் பொழுதே
நேசம் பெருக்கி
நிமிர்வாய் உலகைக்
நிறுத்தும் பசுமை!

வானப் பொழிவாய்
வசந்த ருதுவாய்
கானல் விரட்டும்
கன்னல் வடிவம்!
கோனும் குடியும்
கோபுரம் ஆக
தானக் கொடையாய்
தரணியில் பசுமை!

உணவை உயிர்ப்பை
உவக்கும் மூலம்
உழைப்பை உயர்த்தும்
கனவுத் தாகம்!
பிணக்கம் அற்ற
பிறப்பின் தேடல்
வணங்கிக் காப்போம்
வளமாம் பசுமை!

கீத்தா பரமானந்தன்26-06-23

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading