பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பசுமை!
வறுமை போக்கும்
வரமாய் உலகில்
வனப்பைச் சொரிந்தே
வசந்தம் பொழியும்!
நினைக்கும் பொழுதே
நேசம் பெருக்கி
நிமிர்வாய் உலகைக்
நிறுத்தும் பசுமை!

வானப் பொழிவாய்
வசந்த ருதுவாய்
கானல் விரட்டும்
கன்னல் வடிவம்!
கோனும் குடியும்
கோபுரம் ஆக
தானக் கொடையாய்
தரணியில் பசுமை!

உணவை உயிர்ப்பை
உவக்கும் மூலம்
உழைப்பை உயர்த்தும்
கனவுத் தாகம்!
பிணக்கம் அற்ற
பிறப்பின் தேடல்
வணங்கிக் காப்போம்
வளமாம் பசுமை!

கீத்தா பரமானந்தன்26-06-23

Nada Mohan
Author: Nada Mohan