மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தலைப்பு!
மனத்தின் கருத்தை
கோர்த்து நின்றே
மகிடஞ்சூட்டும் ஆரம்!
மறுகி நின்றே
மணிக் கணக்காய்
மலைக்கவைக்கும் பாரம்!
கவிதை புனைய
நம்மையும் பாடாய்
அலைக்கும் சிலநேரம்!

தொடுத்த படையல்
தோரணம் ஆக
கருவாகும் சாரம்!
பார்த்த கணத்தில்
படரவும் சொல்லும்
பக்கம் பாராது
ஓடவைக்கும் தூரம்!

கையில் மையில்
காட்சிகள் மாற்றும்!
பொய்யைப் புரட்டிப்
புழுதியாய்த் தூற்றும்!
தையல் தாவணி
மெருகைக் கூட்டும்!
தலைப்பைக் காட்டி
மதியை ஏய்க்கும்!

தாயும் அன்பாய்த்
தலையைத் துவட்டித்
தாங்கியே நிற்கும்
சேலைத் தலைப்பு!
காலை மாலை
செய்திகளாகிக் கவரும் வளைப்பு!
உலகே இன்று
மயங்கிக் கிடப்பதும்
வலைப்பூ!

கீத்தா பரமானந்தன்
18-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading