கீத்தா பரமானந்தன்

தலைப்பு!
மனத்தின் கருத்தை
கோர்த்து நின்றே
மகிடஞ்சூட்டும் ஆரம்!
மறுகி நின்றே
மணிக் கணக்காய்
மலைக்கவைக்கும் பாரம்!
கவிதை புனைய
நம்மையும் பாடாய்
அலைக்கும் சிலநேரம்!

தொடுத்த படையல்
தோரணம் ஆக
கருவாகும் சாரம்!
பார்த்த கணத்தில்
படரவும் சொல்லும்
பக்கம் பாராது
ஓடவைக்கும் தூரம்!

கையில் மையில்
காட்சிகள் மாற்றும்!
பொய்யைப் புரட்டிப்
புழுதியாய்த் தூற்றும்!
தையல் தாவணி
மெருகைக் கூட்டும்!
தலைப்பைக் காட்டி
மதியை ஏய்க்கும்!

தாயும் அன்பாய்த்
தலையைத் துவட்டித்
தாங்கியே நிற்கும்
சேலைத் தலைப்பு!
காலை மாலை
செய்திகளாகிக் கவரும் வளைப்பு!
உலகே இன்று
மயங்கிக் கிடப்பதும்
வலைப்பூ!

கீத்தா பரமானந்தன்
18-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading