பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பெண்ணே !
பெறுமதியாம் பெருநிதியாய்ப்
பெண்ணவளே யென்றும்
பெறுவதெல்லாம் துன்பமாயும்
புரள்வதில்லைப் பாதை!
முறுவலதே இவள்வாழ்வின்
முகவரியாய்க் கொண்டே
முழுமதியா யெப்போது
முலவுகின்ற தன்மை!
நிறுவுகிறாள் எங்கணுமே
நித்தியமும் தன்னை
நிலமகழும் தோற்றிடுவாள்
இவள்பொறுமை முன்னே!
உறுதியுடன் எட்டுகிறாள்
உயரங்கள் நாளும்
உணர்வினிலே நிறைத்ததெல்லாம்
ஆக்கலெனும் நாதம்!

சந்தணமாய் யுரைபட்டே
சாற்றுகின்ற மேன்மை
சத்தமின்றித் தருவதெல்லாம்
உள்ளத்தின் தூய்மை!
பந்தமெனக் கொள்வதெல்லாம்
பாசமதன் தேவை
பரவசமே தருகின்றாள்
பாரதனிற் பெண்ணே!
அந்தமில்லா வருளாகி
யாக்குகின்ற தாய்மை
அல்லலின்றி ஆயுளெல்லாம்
நிறைக்கட்டு மின்பம்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading