நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஈரம்!
மண்ணின் ஈரம் பசுமை நிறைக்கும்
மனத்தின் ஈரம் மகிழ்வை விதைக்கும்!
ஈரக் கசிவே இயக்குது உலகை
வேராய்த் தாங்கி வெறுமை போக்கும்!

இறைவன் அளித்த கொடையாய்
இசைந்து சுரக்கும் ஈரம்!
கறைகள் போக்கி நின்றே
கணமும் பசுமை விரிக்கும்!

சின்ன விதையின் ஈரம்
பாறையும் பிளக்கும் தீரம்!
மின்னல் போடும் வானம்
மிகுந்த மழையின் சாரம்!
ஈரம் கொண்ட இதயம்
இடும்மை போக்கும் சாரல்!

பூவின் ஈரம் தேனாய்ப்
பூமியின் ஈரம் நீராய்!
மேவித் தந்திடும் இன்பம்
மேதினி வாழ்வின் சொந்தம்!

கீத்தா பரமானந்தன்
09-12-24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading