முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading