16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
கீத்தா பரமானந்தம்
மார்கழி!
மார்கழிப் பெண்ணவள் மலர்ந்து வந்தாள்
மாறிடும் பருவத்தை மனத்தில் சொன்னாள்
கார்மழைப் பொழிவில் காதல் கொண்டே
கணமும் அணைத்தே களித்து நின்றாள்
ஊரெங்கும் புதுவெள்ளம் ஊற்றெனப் பாய்ந்திட
உருளுது ஆண்டும் ஓடி மறைதே
சோர்வுகள் நீங்கிச் சுகங்களை நிறைத்திட
சுழன்றுமே வருகிறாள் மாதத்தின் இறுதியாய்
பூம்பனி தூவப் புலருது காலை
பூரிப்பில் மண்மகள் தேகம் சிலிர்ப்பில்
ஆம்பலும் அல்லியும் அடங்கியே கிடக்க
அருணனின் வரவும் மெல்லக் குறையுது
பாரெங்கும் ஒளிருது பலவண்ணம் கொண்டே
பாலனின் பிறப்பின் பரவசம் நாடி
விலக்கியே இருளின் விசனங்கள் விரட்டி
விதவித அலங்காரம் வீதிகள் தோறும்
மலர்வுடன் சிரிக்கிறாள் மார்கழிப் பெண்ணாள்!
கீத்தா பரமானந்தன்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...