மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கெங்காஸ்ரான்லி

இருட்டில்…
————-
மாலை விரைவில் இருட்டி விடும்
காலை மேகமூட்டம் இருண்டிருக்கும்
பகல்பொழுது குறைவாகவே இருக்க
இரவோ கூடின நேரம் இருண்டிருக்கும்
வீடுகள் எல்லாம் அமைதி நிலவும்
றோட்டெல்லாம் வெறிச்சென இருக்கும்
மக்கள் நடமாட்டம் அருகியிருக்கும்
பாக்கள புனைய உள்ளம் ஏவும்
இருட்டிலே எல்லாமே சூனியம்
மரட்டும் பயமும் மனதில் தோன்ற
உருட்டும் சத்தம் ஓசை கேட்க
வெருட்டும் தாக்கம் விறைத்து நிற்க
இருட்டை விரும்புபவர் இரக்கமிலார்
பொருளும் பொன்னும் தேட்டமடைவார்
எண்ணும் யாவும் காரியமாக வேண்டி
பண்ணும் வேலை விண்ணென முடிப்பார்
நேரமாற்றம் ஐப்பசிக் கடைசியில்
காலமாற்றம் கடுங்குளிர் இல்லை
இலையும் கொட்ட மழையும் பெய்ய
அலையுது மனமோ விடியலைத் தேடி
நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading