கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
சலவை
————
சலவை செய்த உடுப்பே
தூய்மையைக் காட்டும்
கந்தையானாலும் சலவை செய்து
சுத்தமாக உடுக்க வேண்டும்
உள்ளத்தை சலவை செய்தால்
உள்ளே இறைவன் இருப்பான்
வெள்ளம் கூடப் பாய்கையில்
வழியில் கிடப்பதை சலவை செய்தே பாயும்
வெள்ளை வெளேர் என்று
சலவை செய்த உடுப்பு
ஆசானுக்கு
அதிலே தோன்றுமே மகிழ்ச்சி
சலவைகள் நன்றாகச் செய்யப்படுகின்றன
சலவைத் தொழிலாழியால் அல்ல
சலவை செய்யும் மெஷினால்
மூளையும் சலவை செய்யப்படுகிறது
சில மனிதர்களால்
அதிலே புத்திசாலிகளும் தோற்பதுண்டு
சலவை பல வித்த்திலுண்டு
பார்த்துச் செய்யப்பட வேண்டிய தென்று!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading