ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
மீண்டெழு
———/
புயலால் அழிந்த வயலை
புதுப்பொலிவாக்க மீண்டெழுந்தான்
உழவன்
துவண்டு விடாத ஊக்கத்்தால்
தொடர்ந்துழுது பயிர் வளர்த்து
பாங்குடன் வாழ்ந்தான்
துயரத்தால் ஏங்கும் உள்ளம்
சோர்ந்து விடும் நேரத்தில்
காட்டும் பரிவு மீண்டெழ வைக்குமே
வயோதிபம் என்று வாழ்ந்திருந்த வேளை
மனம் தந்த தையிரியம் மீண்டெழ வைக்குமே
வாழ்ந்த மண்ணை விட்டு வந்து
வளம் கொழிக்கும் நாட்டில் வசித்தால்
மண்ணை மீட்கும் போரில்
மீண்டெழுவார் யாரோ
விழ விழ எழுந்தால் தான்
வீரமும் வெல்ல முடியும்
பாரினில் எம்மையும் காட்ட முடியும்
மண்ணில் விழுந்தால்
எழும்பி மண்ணைத் தட்டி விட்டு
மீண்டெழு
உனது பணியை தொடர்ந்து செய்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading