தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வைகாசியில்

வைகாசியும் பிறந்தது
வஞ்சியரும் மகிழ்ந்தனர்.
துஞ்சியவர் துயிலெழும்பி
மஞ்சளும் பூசிக் குளித்தனர்.

மஞ்சள் வெயிலிலே
மலர்ந்தன மலர்கள்.
வண்டுகள் ரீங்காரம்
சுண்டியே இழுத்தது.

மயங்கிய மலர்களும்
வாவென வரவேற்க.
வண்டினம் புணர்ந்தது
மகரந்த மயக்கத்தில்.

தேனுண்ட இனிமை மயக்கம்
தேரா மண்ணில் முடக்கம்.
அந்தோ தேயந்துவிட்டதே
வண்டின் இணக்கம்.

ரீங்காரமிட்ட வண்டு
லீலைகள் புரியும் எண்டு.
நினைத்த மலர்ச் செண்டு
நனைந்தன மழையில் நின்று.

பெருமழை பெரும்புயல்
முறிந்தன மலர்கொப்பு.
நிலத்திலே வாடி விழ
வெள்ளம் இழுத்து
சென்றது மலரையும்
வண்டையும்.
வைகாசியில் இதுவும்
ஒரு வன்மையா என நினைத்தபடி.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading