மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

உயர்வு யாரிடம்

தன்னைத் தானே
புகழ்ந்து கொள்ளும்
தகுதியில்லா மாந்தரை
இகழ்தல் தகும்.
நன்மை பெறவேண்டின்
நல்லவிதமாகப் பேசிடுவர்.
நன்மையது பெற்றபின்
நயவஞ்சகமாக கழற்றிடுவர்.
பொங்குகின்ற பூமீயில்
புழுக்களின் வேலையது.
தங்கி வைக்கும் செயலுக்கு
தாரக மந்திரமாம்.
உன் செயல் நடப்பதற்கு
ஊர்ச்சனம் வேண்டும் உனக்கு.
உனது செயல் முடிந்துவிட்டால்
ஊதாசீனம் செய்துவிடும்.
நன்றியுடன் வாழும்
ஐந்தறிவு ஜீவன்.
நன்றியை மறந்ததே
ஆறறிவு ஜீவன்.
இதில் பெருந்தன்மை
யாரிடமுள்ளது
ஆறறிவை விட ஐந்தறிவு
உயர்ந்து விட்டதே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan