இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டை வரவேற்றபடி
——————
புத்தாண்டும் வந்துவிட்டது
புதுப புது மாற்றமும் நடக்கிறது
பழைய ஆண்டு கழிந்து விட்டது
பழைய நினைவுகள் மாறவில்லை
மக்களின் மனங்களில் ஏக்கம்
மறுபடியும் ஏதாயினும் வருமோ என்ற தாக்கம்
நல்வரவு புத்தாண்டு நலமாக
அமையவேண்டும் எல்லாமே சுகமாக
வெள்ளப் பெருக்கு புயல் ஒரு புறம்
மழையின் கொடையோ தாராளம்
நீர் முட்டி வழிகிறது
நீரால் நாடு அழிகிறது
இயற்கையின் சீற்றம் குறைந்து
இயற்கை அமைதி பெற்று
மக்கள் மனதில் மகிழ்வைத்தர
புத்தாண்டை வரவேற்றபடி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading