இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பொங்கலோ பொங்கல்
—————
பொங்கலோ பொங்கல்
புதுப்பானையில் புத்தரிசி
பயறுடன் சர்க்கரை ஏலமக்காய்
முந்திரிப்பருப்பு திராட்சைப்பழம்
கமகம் வாசனையுடன் நெய்
தித்திக்கும் இனிய பொங்கல்
புதுப்புது சிந்தனைகள்
புதிய புதிய யுக்திகள்
பதிய வைக்கும் வழிகள்
மனதில் நற்பண்புகள்
நடைமுறையில் தெரிய வைப்பது
நல்லுறவு நல்லடக்கம்
நல்வாழ்வின் ஆரோக்கியம்
பொங்கும் பாலில் பொசுங்கும்
அழுக்கும் பொறாமையும்
வெந்த பின் ஏற்படும்
பொங்கலின் இனிமைபோல்
மனங்களும் இனிக்கட்டும்
தங்குதடையின்றி தரணியில்
தைமகளின் வருகை
சிறப்படையட்டும்
தைமகள் வந்தாலே உழவர் ஏழைகள்
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தானே
கதிரவனுக்கு நன்றி கூறும் நாள்
உழவர் தாம் பட்ட துன்பம்
தீரும் நாள்
பொங்கல் பானையில்
பொங்கி வழியும்
பொங்கல் போல்
மக்கள் மனதிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading