கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
———-
மாசிப் பனி. மூசிப்பெய்யும்
மாந்தர்களும் பேசித் திரிவர்
மேகமோ கறுத்திருக்கும்
மெல்லிய மழையும் தூறி நிற்கும்
மாசியில் வரும் மகாசிவரத்திரி
மக்களை நல்வழிப் படுத்தும்
சிவனுக்கு உகந்த மாதம்
புண்ணியம் சேர்க்கும் மாதம்
மந்த மாருத வரவை ப் பார்த்து
மகிழ்ச்சி காணும் மாதம்
மாசியில்தானே கார்ணவெல் கொண்டாடப்படும்
இங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்
கவலை துன்பம் மறந்து
உள்ளத்தில் உற்சாகமாக இருப்பர்
உள்ள பணத்தை செலவு செய்து விட்டு
அடுத்த மாதம் வெறுமை காணுவதும்
உண்டிங்கே
கவலை மறந்த மனிதர் இவர்கள்
தமிழர் அப்படியல்ல பணம் தேடுவதில்
தம் வாழ்வை இழப்பர்
மாசியில் மக்கள் மகிழ்வுடன் வாழட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
29.1.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading