இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
———-
மாசிப் பனி. மூசிப்பெய்யும்
மாந்தர்களும் பேசித் திரிவர்
மேகமோ கறுத்திருக்கும்
மெல்லிய மழையும் தூறி நிற்கும்
மாசியில் வரும் மகாசிவரத்திரி
மக்களை நல்வழிப் படுத்தும்
சிவனுக்கு உகந்த மாதம்
புண்ணியம் சேர்க்கும் மாதம்
மந்த மாருத வரவை ப் பார்த்து
மகிழ்ச்சி காணும் மாதம்
மாசியில்தானே கார்ணவெல் கொண்டாடப்படும்
இங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்
கவலை துன்பம் மறந்து
உள்ளத்தில் உற்சாகமாக இருப்பர்
உள்ள பணத்தை செலவு செய்து விட்டு
அடுத்த மாதம் வெறுமை காணுவதும்
உண்டிங்கே
கவலை மறந்த மனிதர் இவர்கள்
தமிழர் அப்படியல்ல பணம் தேடுவதில்
தம் வாழ்வை இழப்பர்
மாசியில் மக்கள் மகிழ்வுடன் வாழட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
29.1.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading