மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நீர்க்குமிழி
———-
கடலில் ஏற்படும் நீர்குமிழி
கணப்பொழுதில் மறைந்து விடும்
அடிக்கடி தோன்றினாலும் அதிகம்
அமிழ்ந்தே விடும் விரைவில்
சிலநினைவுகள் கூட நீர்க்குமிழி
சிலரது வாழ்க்கையும் நீர்க்குமிழி
சில எண்ணங்களும் நீர்க்குமிழி
பல வர்ணங்களும் வானவில்லே
மனிதன் நினைப்பது வாழ்க்கை
நிலைக்குமென்று
மனிதன் பிறக்கும்போதே இறப்பு
நிச்சயிக்கப் படுகிறது
எப்போது என்றுதான் யாருக்கும்
தெரிவதில்லை
அதற்கிடையில் எத்தனை ஆட்டம் பாட்டம்
இத்தனையும் நீர்க்குமிழிதானே
வாழ்க்கை வசந்த மென்று
நினைந்திருக்கையில்
வசந்தமும் வலியாக்கி
வருத்திய போது
வசந்த வாழ்க்கை
பாதியில் முடிந்தபோது
வாழ்க்கையும் நீர்க்குமிழி
எனப் புரிய வைத்தது
கெங்காஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading