சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நீர்க்குமிழி
———-
கடலில் ஏற்படும் நீர்குமிழி
கணப்பொழுதில் மறைந்து விடும்
அடிக்கடி தோன்றினாலும் அதிகம்
அமிழ்ந்தே விடும் விரைவில்
சிலநினைவுகள் கூட நீர்க்குமிழி
சிலரது வாழ்க்கையும் நீர்க்குமிழி
சில எண்ணங்களும் நீர்க்குமிழி
பல வர்ணங்களும் வானவில்லே
மனிதன் நினைப்பது வாழ்க்கை
நிலைக்குமென்று
மனிதன் பிறக்கும்போதே இறப்பு
நிச்சயிக்கப் படுகிறது
எப்போது என்றுதான் யாருக்கும்
தெரிவதில்லை
அதற்கிடையில் எத்தனை ஆட்டம் பாட்டம்
இத்தனையும் நீர்க்குமிழிதானே
வாழ்க்கை வசந்த மென்று
நினைந்திருக்கையில்
வசந்தமும் வலியாக்கி
வருத்திய போது
வசந்த வாழ்க்கை
பாதியில் முடிந்தபோது
வாழ்க்கையும் நீர்க்குமிழி
எனப் புரிய வைத்தது
கெங்காஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading