அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்ணே!
———
பெண்ணே நீ பேதையல்ல
பிரட்டி போடும் பேப்பரைமல்ல
கண்போல் காக்கும் கரணையே
விண்ணை முட்டும் வித்தகமே
மண்ணே போற்றும் மானவுள்ளவளே
மூடர்கள் பலர் முடக்குவர் உனை
பாடல்கள் சொல்லும் உன் சாதனை
ஏட்டில் எழுதிய வீரம்
எடுத்தாளும் உன் பராக்கிரம்ம்
பெண்களை முட்டித் தள்ளும் கொம்பாய்
ஆண்களிடம் உண்டாம் அதுவே
ஆண்களின் தன்மை அடக்குதல்
பெண்ணின் தன்மையோ பொறுமை காத்தல்
பெண் வீரம் கொண்டெழுந்தால்
அழித்து. விடுவாள் அனைத்தும்
அவள் மெளனம் அடங்கி போவதல்ல
அவளின் அனபின் ஒழுக்கமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
3.6.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading