தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கொழுந்தைப் பறித்த கொழுந்து

ராணி சம்பந்தர்

உள்ளம் கொதிக்கிறது
வெள்ளம் சாதிக்கிறது
பள்ளம் சோதிக்கிறததே
அள்ள அள்ளத் தோண்டக்
கண்டு பிடித்த உடலமும்
கண்டு பிடியாத பிணமும்
வதைத்துத் துவைத்ததே

கொழுந்து பறித்து வளர்ந்த
குழந்தைகள் விழுந்து விழுந்து
மெல்ல எழுந்த மலையகத்து
மாந்தரை அதே கொழுந்தில்
கொழுந்தோடு கொழுந்தாய்ப்
பசி மோகம் தீர்க்கப் புதைத்ததே

சூழ்ந்து வந்திடும் செயற்கைக்
கெடுகேடுகளில் அவதியுறும்
இயற்கையோ செய்வதறியாது
அப்பப்ப அலங்கோலமாகவே
கிள்ளியெடுக்கும் கொழுந்துகளில்
அள்ளி எடுக்கும் உயிர்களிலே
தாகந்தீரத் துவைத்துத் துவைத்து
சிதைக்கிறதே .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading