இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

காணி

தென்னை பனைமரத் தோப்பும் சிதைவடைய
ஒன்றாய் வாழ்ந்தவீடும் ஒவ்வொன்றாய்க் களவுபோக
மல்லிகைப் பந்தலும் மலர்களின் வாசனையும்
உல்லாச வாழ்வும் உருக்குலைந்தும் போக

எங்கள் காணி எங்கே எனத்தேடல்
அங்கிருந்த வேலியின் எல்லையையும் காணோம்
ஒட்டி உறவாடிய உறவையுமே காணோம்
பட்டியில் நின்ற பால்மாடையும் காணோமே

பந்தமும் குலைய பட்டியும் குலைந்து
சொந்தக் காணியும் சருகுகள் மூட
வெந்து மனமும் வேதனையில் வாடுகிறோம்
இந்தப் புலப்பெயர் இருப்பிடத்தில் இருந்தே….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading