மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

முள்ளிவாய்க்கால்

பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி
விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச் சரிந்ததை
எண்ணிடக் கண்களில் இரத்தக் கண்ணீர் சொரிகிறதே!
மண்கண்ட வேதனைகளை மரணித்தாலும் மறக்கத் தகுமோ?

குஞ்சுகளின் பிஞ்சுகளின் குருதிகளும் ஆறாய் ஓடியதே
நெஞ்சு பிளக்கச் செய்கிறதே
வஞ்சகம் இல்லாப் பிஞ்சுக் குழந்தை
அரசியல் பேசியதா? அன்றி ஆயுதம் ஏந்தியதா?

மண்ணில் விளைந்த முத்துக்களின் மரணோலமும்
முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மாந்தரை
எண்ணித் துடியாய் துடிக்குது மனமே!
கண்ணீர் ஆறாய்ப் பெருக கதறி நின்றோமன்று….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading