மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மண்

எங்கள் மண்ணும் அம்பிகை அருளால்
பொங்கும் பெருமை புகழாய்ச் சொரியுது
சங்கத் தமிழுடன் சரித்திரம் சொல்லுது
புங்கை மண்ணும் புகழாரம் சூடுது

ஐந்து கோபுரம் அழகாய்த் தோன்றி
நொந்த மாக்களின் நோயைத் தீர்த்திட
வெந்த புண்ணில் வேப்பிலை தடவ
வந்துதித்தா அம்பிகை வரமாய் எமக்கு

பக்தர்கள் புடைசூழ பவனிவந்தும் அம்பிகையும்
மக்களின் துயர்துடைத்து மகிழ்வுனையும் தந்திடுவா
பக்கத் துணையிருந்து பட்டதுயர் போக்கிடுவா
பக்தியுடன் வணங்கிடவே பரிதியைப்போல் ஒளிதருவா….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan