பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மண்

எங்கள் மண்ணும் அம்பிகை அருளால்
பொங்கும் பெருமை புகழாய்ச் சொரியுது
சங்கத் தமிழுடன் சரித்திரம் சொல்லுது
புங்கை மண்ணும் புகழாரம் சூடுது

ஐந்து கோபுரம் அழகாய்த் தோன்றி
நொந்த மாக்களின் நோயைத் தீர்த்திட
வெந்த புண்ணில் வேப்பிலை தடவ
வந்துதித்தா அம்பிகை வரமாய் எமக்கு

பக்தர்கள் புடைசூழ பவனிவந்தும் அம்பிகையும்
மக்களின் துயர்துடைத்து மகிழ்வுனையும் தந்திடுவா
பக்கத் துணையிருந்து பட்டதுயர் போக்கிடுவா
பக்தியுடன் வணங்கிடவே பரிதியைப்போல் ஒளிதருவா….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan