மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் கவி
பொறுமையில் பூமாதேவி

பெண்ணவள் பெற்றிட்ட பேறு பூமியில்
பேதையவள் பொறுமையில் பூமா தேவி
கண்ணெனக் காத்திட்டால் கலங்காது வாழ்வாள் – ஆனால்
கசக்கிப் பிழிந்திடுவார் கண்விழி நீர்வடிய

பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத பெண்கள்
பலருண்டு இந்தப் புவியில்
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
முழுப்பொ றுப்பையும் முந்தா னையிலே

முடிந்துமே முழித்திடுவாள் முழியும் பிதுங்கிட
மகவுப் பேற்றிலே மறுபிறப்புக் காண்பவள்
படித்துப் பட்டமும் பெற்றிடுவாள் அதனால்
புவிக்கு ஒப்பாக புனைந்தாரோ பெண்ணவளை….

Nada Mohan
Author: Nada Mohan