க்குமரன் 303.23

வியாழன் கவி
ஆக்கம்—

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவு

தூய்மை தரும் தண்ணீர்
துயர் கொள்ளலாமா?

மாசுபடும் சூழல்
மாறவிடலாமா?

சாந்தி தரும் தாகம்
சாபம் போடலா?

கங்கை அவள் மேனி
கலங்கம் கொள்ளலாமா?

ஆற்றில் போட்டாலும்
அளந்து. போடு என்பது
போதம்

கணக்கு. அற்ற மீதம்
கரைத்துப் போடலாமா?

சுத்தம் தரும் சூழல்
சுகவாழ்வு. தருமே !

புத்தியுடன் வாழ்வில்
புரிந்து வாழலாமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading