சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

க்குமரன் 303.23

வியாழன் கவி
ஆக்கம்—

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவு

தூய்மை தரும் தண்ணீர்
துயர் கொள்ளலாமா?

மாசுபடும் சூழல்
மாறவிடலாமா?

சாந்தி தரும் தாகம்
சாபம் போடலா?

கங்கை அவள் மேனி
கலங்கம் கொள்ளலாமா?

ஆற்றில் போட்டாலும்
அளந்து. போடு என்பது
போதம்

கணக்கு. அற்ற மீதம்
கரைத்துப் போடலாமா?

சுத்தம் தரும் சூழல்
சுகவாழ்வு. தருமே !

புத்தியுடன் வாழ்வில்
புரிந்து வாழலாமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading