பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 231

அரச மரம்

நிழல் தரும்
அரச மரம்
நீதி தருமா
சொல் மனமே!

கதை சொல்லும்
வரலாற்றில்
பரிநிர்வாணம்
புத்தருக்கு
உனது அண்டை
தந்ததாலே!

பரந்த ஈழத்தில்
பார்க்கும்
இடமெல்லாம்
பௌத்த புத்தர்
சிலை வைத்து

உன் பாதம்
வைத்த இடமென்று
விகாரைகள்
உருவாகும்
விகார மனங்களை
காண்கின்றோம்

அகிம்சை அற்ற
ஆன்மீகம்
அதிருப்தி தரும்
தார்மீகம்

மண் காக்க
அரச மரத்தை
சாய்த்திடுவோமா
சொல். மனமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading