க.குமரன் 27.4.23

வியாழன் கவி
ஆக்கம் 111

வளர்ந்த குழந்தைகள் தாமே!

எழுதிடும் கவிகள்
வலியினைக் தாங்குமா
வரியதின் வழிதனில்
மன வலி போக்குமா ?

சிறகுகள் ஒடித்திட
பறவைகள் பறக்குமா
பறந்திட உதவிட
வார்த்தைகள் போதுமா ?

தாங்கும் இதயங்கள்
சார்பதை தேடுமா?
வருகின்ற நாட்களில்
வழித்துனை தோன்றுமா?

புலர்ந்திடும் பொழுதுகள்
விடிவதைக் காட்டுமா?
கரங்களைக் கூப்பி
கடவுளை நாடி

நலம் வளம் பெற
நம்பிக்கை கொள்வோமா!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading