அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

க.குமரன் 27.4.23

வியாழன் கவி
ஆக்கம் 111

வளர்ந்த குழந்தைகள் தாமே!

எழுதிடும் கவிகள்
வலியினைக் தாங்குமா
வரியதின் வழிதனில்
மன வலி போக்குமா ?

சிறகுகள் ஒடித்திட
பறவைகள் பறக்குமா
பறந்திட உதவிட
வார்த்தைகள் போதுமா ?

தாங்கும் இதயங்கள்
சார்பதை தேடுமா?
வருகின்ற நாட்களில்
வழித்துனை தோன்றுமா?

புலர்ந்திடும் பொழுதுகள்
விடிவதைக் காட்டுமா?
கரங்களைக் கூப்பி
கடவுளை நாடி

நலம் வளம் பெற
நம்பிக்கை கொள்வோமா!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan