மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்—239

அந்திசாயும் நேரம்
அந்த பஸ்சின் ஓரம்
சாரதிக்கு அருகே
பயணம் செய்யும் நேரம்

மேலாடை அற்ற மனிதன்
போதையில் தள்ளாடும் ஒருவன்
டிக்கட் எடுக்க
காசு இல்லை
பஸ்சை எடு என வினவி
நுழைந்து பின்சென்றான்
ஓடாது பஸ் ஸ்தம்பிக்க!

ஒடி வந்து துப்பினான் சாரதிக்கு
இறங்கும் வரை
ஓடாது என்று சொல்ல
ஓங்கி அடிக்க
தீ அனைப்பு போத்தலை
எடுத்தான்

கட்டிய போத்தல்
கைக்கு எட்டவில்லை!
இறங்கி கல் எடுத்து
அடித்தான் கண்ணாடிக்கு!

வன்மம் செய்தவனை
வாரி அனைக்க
பொலிசை அழை என்றோம்

வீதியில் நடப்போருக்கும்
விசனங்கள் நடக்கலாம்
அச்ச நினைவுகளில் நின்று
ஆறுமோ மனது!…..,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan